Monday, September 27, 2010
Monday, August 9, 2010
வன பத்திரகாளி
உரல் சத்தமும்
உலக்கை சத்தமும்
கேட்காத....
அடர் வனத்தின்
நடுவில் விட்டிருந்தால்
வன பத்திரகாளி
கன முலை
தழுவும் சர்பங்களையே
மாலைகளாகவும்
சருகுகளை அர்ச்சனைகளாகவும்
கொண்டு
அரை நுற்றாண்டு
வரலாறுக்கு பிறகு
எழாவது நிழற் சாலையின்
முன்றாவது பிரிவில்
வன அம்பிகையாக
நகரின் நடுவில்
அருள் பாலித்து கொண்டு இருக்கிறாள்
நீங்கள் யாரேனும்
அவ்வழியே கடந்து சென்றால்
சருகுகள் கொண்டு அவளுக்கு
அர்ச்சனை செய்து வாருங்கள்
மன மகிழ்ந்து
வரமோ சாபமோ
அருளக்குடும்
மணியன்
வாழ்க்கை
பிரதான சாலையின்
தெரு முக்கில் எதிர் பாராமல்
சந்திக்கிறோம்
தேனீர் பருகலுக்கும்
புகைபதற்கும் இடையே
பிரிவிலிருந்த நாட்களைபற்றி
இருக்கின்ற வேலையைபற்றி
முகம் மறந்த நண்பர்களைபற்றி
சேர்ந்திருந்த நாட்களைபற்றி
பகிர்ந்து கொள்கிறோம்...
தேனிரும் சிகரெட்டும் முடிந்திருந்த
தருணத்தில் இருவருமே
"அவசர வேலை இருப்பதாய் "
விடை பெற்று கிளம்புகிறோம்
இறுதி வரை நீயும் கேட்கவும் இல்லை
நானும் தரவில்லை அவரவர்
முகவரிகளை...
Subscribe to:
Posts (Atom)