சொல்லவொண்ண
துயரங்களின் நீட்சியாய்
கடந்தும், கடத்தியும்
செல்கிறது வாழ்க்கை
சிரித்து கழித்து
அழுது மருங்கி
குடி முயங்கி
கலைத்து விழித்து
கனன்று வாழ்ந்து
சிதை தழல் மூண்டு
பொசுங்கி நாரி
முழுதாய் அறியாமலும்
புரியாமலும்
அடர் வனத்தின் நடு மரம்போல
அறியப்படாமலே போய் விடுமோ
வாழ்க்கை
No comments:
Post a Comment